முகப்பு
தூத்துக்குடி

தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாலாட்டின்புத்தூர் காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 5:24 AM
பகிர்:

நாலாட்டின்புத்தூர் காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
வானரமுட்டி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆய்வாளர் ஜூடி தலைமை வகித்து,  இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகனத்தில் பின்னால் பயணிப்பவர்கள் இருவரும் தலைக்கவசத்தை அணிய வேண்டும் என்றும், செல்லிடப்பேசியை பேசியபடி வாகனத்தை ஓட்டக்கூடாது.  நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சீட்-பெல்ட் அணிய வேண்டும்.  சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றும்,  வாகன ஓட்டுநர்கள் மதுவை அருந்திய நிலையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. மேலும், அரசு விதிகளின்படி பயணிகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டுமே தவிர, சட்ட விதிமுறைகளை மீறக்கூடாது  எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தினர். 
இதில், நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், ஆட்டோ, சுமை ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.