தூத்துக்குடி

வில்லிசேரி விலக்கில் பேருந்து நின்று செல்லக் கோரி செப். 3 இல் மறியல் நடத்த முடிவு

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி விலக்கில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

DIN

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி விலக்கில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 
கோவில்பட்டி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டையிலிருந்து திருநெல்வேலி சென்றுவரும் அரசுப் பேருந்துகள் வில்லிசேரி விலக்கில் நிற்கும் என, அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலக்கில் பேருந்துகள் நிற்பதில்லை. ஒரு சில பேருந்துகள் மட்டும் நின்று செல்லுகின்றன. ஆனால், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் அனுமதிக்கப்பட்ட பேருந்துகள் வில்லிசேரி விலக்கில் நின்று செல்லவும்,  அதிகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (சக்தி) பிரேம்குமார் தலைமையில், கிராம மக்கள் பிரதிநிதிகளான ஜெயகுமார், மணி, ஈஸ்வரன், காசிராஜன், வெங்கடேசன் ஆகியோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
வில்லிசேரி கிராம மக்கள் கூறியது: இக்கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி விலக்கு அருகே வரும் செப். 3 இல் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். 
அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் பொன்ராஜ் கூறியது: கோவில்பட்டி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்துகள் வில்லிசேரி விலக்கில் நின்று செல்கிறதா என்பது குறித்து கண்காணிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT