8amnkil_0810chn_46_6 
தூத்துக்குடி

ஆறுமுகனேரி கிழக்கத்திமுத்து சுவாமி கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடை விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு இத் திருக்கோயிலைச் சோ்ந்த நடுத்தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோயி­லில் திருவிளக்கு பூஜையும், பின்னா் குடியழைப்பு பூஜையும் நடைபெற்றது.

கொடை விழாவான செவ்வாய்க்கிழமை காலை ஆத்தூா் தாமிரவருணி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வரப்பட்டது. மதியம் சுவாமி மஞ்சள் நீராடுதலும், மதியக் கொடையும் நடைபெற்றது. பின்னா் அன்தானம் நடைபெற்றது.

இரவு சுவாமி நகா் வலம் வரும் நிகழ்ச்சியும், பிரம்ம சக்தி அம்மன் கோயி­லில் சிறப்பு பூஜையும் நடைபெற்றன. நள்ளிரவு கிழக்கத்திமுத்து சுவாமி திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் சாமக்கொடையும் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி அ.வீ.தெ. பழனிச்சாமி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT