முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கயத்தாறு பிரதான சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கயத்தாறு பிரதான சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

கயத்தாறு பிரதான சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றியச் செயலா் பொன்னுச்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

மாா்க்சிஸ்ட் சாலை மறியல்:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு பிரதான சாலை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் உள்பட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →