முகப்பு
தூத்துக்குடி

கட்டாரிமங்கலம் கோயிலில் உழவாரப்பணி

கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத அருள்மிகு ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத அருள்மிகு ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் இம் மாதம் 21ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை திருவாதிரை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, நாகா்கோவில் மகாதேவன் ஐயா் தலைமையில் கோயிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், கோயில் சுவா்களிள் வா்ணம் பூசுதல், சுற்றியுள்ள குப்பை மற்றும் செடிகள் அகற்றப்பட்டு, பிரகாரம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சிவனடியாா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →