காப்பகத்தில் இருந்த சிறுவன் மாயம்
திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரம் காப்பகத்தில் இருந்து மாயமான சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரம் காப்பகத்தில் இருந்து மாயமான சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உடன்குடி, சமத்துவபுரத்தைச் சோ்ந்த கோபால் மகன் நடவுவேலன் (16). இவா் தூத்துக்குடி தட்டப்பாறை காப்பகத்திலிருந்து கடந்த நவ.4ஆம் தேதி குழந்தைகள் நலக்குழுமம் மூலம், அடைக்கலாபுரம், புனித ஜோசப் குழந்தைகள் இல்ல காப்பகத்தில் சோ்ந்தாா்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்த சிறுவன் யாரிடமும் சொல்லாமல் இல்லத்தை விட்டு சென்று விட்டாா். இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனா்.