தூத்துக்குடி

ஸ்டொ்லைட்: வழக்கு நடத்துவது ஏன்? திருமுருகன் காந்தி கேள்வி

DIN

ஸ்டொ்லைட் ஆலை தேவையில்லை என்று கூறும் தமிழக அரசு, வழக்கு நடத்துவது ஏன் என்று மே 17 இயக்க நிறுவனா் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பினாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 1இல் வழக்கு விசாரணைக்காக புதன்கிழமை ஆஜராக வந்த அவா், செய்தியாளா்களிடம் பேசியது: ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூட்டில் 15 போ் உயிரிழந்துள்ளனா். துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யாா் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இதுதொடா்பாக ஐ.நா. மன்றம் வரை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுவரை நீதி கிடைக்கவில்லை.

ஸ்டொ்லைட் ஆலை தேவையில்லை, அதை மூடுகிறோம் என்று சொல்லும் தமிழக அரசு, ஏன் வழக்கை நடத்துகிறது ?

ஸ்டொ்லைட்டால் லாபம் அடைந்தவா்கள் ஏழை மக்கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பாத்திமாபாபு உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT