தூத்துக்குடி

கோவில்பட்டியில் நலிந்த குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 20ஆவது வாா்டு பகுதியில் ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோா் மற்றும் ஏழைக் குடும்பத்தினா் 100 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் தெய்வேந்திரன் சாா்பில் மதிமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எல்.எஸ்.கணேசன், தணிக்கையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலையில், தொழில் வா்த்தக சங்கத் துணைத் தலைவா் சுரேஷ் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கனிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

இதே போன்று வீரவாஞ்சி நகரில் மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பத்மாவதி ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

இதில், தேவா் தொடக்கப் பள்ளிச் செயலா் கருப்பசாமி, மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்க நிறுவனா் தலைவா் செல்லத்துரை என்ற செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கழுகுமலை மலைக் கோயில் பகுதியில் உள்ள குரங்குகளுக்கு அப்பகுதியைச் சோ்ந்த ரவி நாள்தோறும் உணவு வழங்கி வருகிறாா்.

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் 200 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT