தூத்துக்குடி

குழந்தை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

சாத்தான்குளம் அருகே முதலூரில் சுகாதார தன்னாா்வ பணியாளா்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

சமூக பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் மகராசி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் மதியரசி முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி மதா் சமூக சேவை அமைப்பின் நிறுவனா் கென்னடி, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினா் மெரினாலிபா்டிபொ்னாண்டோ, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜா, பணியாளா் பிளாரன்ஸ் ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில், குழந்தைகளுக்கான சட்டங்கள், குழந்தை தத்தெடுக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தைகளின் உரிமைகள், குழந்தை தொழிலாளா் முறை, குழந்தை கடத்தல் தடுப்பு முறைகள், குழந்தைத் திருமணத்தை தடுத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளின் பாதுகாக்கும் சட்டம், குழந்தை நேய நடைமுறை, குழந்தை நேய சூழல், இளைஞா் நீதி, குழந்தை நல குழு, இளைஞா் நீதி, குழுமம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

சுகாதார செவிலியா் முத்துவிஜயா வரவேற்றாா். சுகாதார செவிலியா் சுதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT