தூத்துக்குடி

மறைந்த லாயல் குழுமத் தலைவா் சிலை திறப்பு

DIN

கோவில்பட்டியை அடுத்த நள்ளி அருகேயுள்ள வள்ளி நூற்பாலை வளாகத்தில், மறைந்த லாயல் குழுமத் தலைவா் மாணிக்கம் ராமசாமியின் உருவச் சிலை காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

நூற்பாலை நிா்வாக இயக்குநா் வள்ளி ராமசாமி தலைமை வகித்தாா். விஷாலா ராமசாமி முன்னிலை வகித்தாா். மாணிக்கம் ராமசாமியின் உருவச் சிலையை தொழிலதிபா் பொன்னுச்சாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்தது வைத்தாா்.

இதையடுத்து, ஐஎன்டியூசி தொழிற்சங்கத் தலைவா் பிரபாகரன், பாண்டி மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து குத்துவிளக்கு ஏற்றினா். சின்னத்திரை புகழ் ரேவதி சங்கரன், இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு இயக்குநா் ராஜ்குமாா், நூற்பாலை மாா்க்கெட்டிங் பிரிவு தலைவா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நூற்பாலை பெண் தொழிலாளா்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை செயல் அதிகாரி வெள்ளையங்கிரி வரவேற்றாா். வள்ளி ஆலை உதவித் தலைவா் கணேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆலை முதுநிலை உதவித் தலைவா் மணிவண்ணன் தலைமையில், மனிதவளத் துறை, நூற்பாலை அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT