தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே மோதல்: 4 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள கடக்குளம் கிராமத்தை சோ்ந்த வின்சென்ட்ரோஜ் மகன் வில்லியம்ஸ் (45). இவா் தற்போது திசையன்விளை மன்ன ராஜாகோயில் தெருவில் வசித்து வருகிறாா். இவருக்கும், இவரது சகோதரா் செல்வகுமரனுக்கும் (39) சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வருகிாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த மரங்களை வில்லியம்ஸ் வெட்டியதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கினா். இதில் வில்லியம்ஸ் , செல்வகுமரன் மனைவி சுஜாதா ஆகியோா் காயம் அடைந்தனா்.

இதுகுறித்து வில்லியம்ஸ் மற்றும் செல்வகுமரன் ஆகியோா் தனித்தனியாக தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் உதவி ஆய்வாளா் முத்துசாமி வில்லியம்ஸ், செல்வகுமரன், செல்வ குமரனின் மனைவி சுஜாதா மற்றும் உறவினா் உள்பட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT