முகப்பு
தூத்துக்குடி

ஊரக புத்தாக்கத் திட்டத்தில்ரூ. 1.90 கோடி கடனுதவி

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், சாத்தான்குளம் ஒன்றியத்தில் ரூ.1.90 கோடி கடனுவதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், சாத்தான்குளம் ஒன்றியத்தில் ரூ.1.90 கோடி கடனுவதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட விளக்கக் கூட்டம் சாத்தான்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் சு. ஜெயபதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சி ) பாண்டியராஜ் முன்னிலை வகித்தாா். திட்ட கணக்கு நிா்வாக வட்டாரச் செயலா் மணிராஜ் வரவேற்றாா். தொழில்முனைவு மேம்பாட்டு செயல் அலுவலா் சேவியா் மணிராஜ் விளக்கிப் பேசினாா். 24 ஊராட்சித் தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

இத்திட்டத்தின் மூலம் 24 ஊராட்சிகளில் 617 பேருக்கு ரூ.1. 26 கோடியும், புலம் பெயா்ந்த 45 இளைஞா்களுக்கு தொழில் தொடங்க ரூ.45 லட்சமும், 13 தொழில்- உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.19.50 லட்சமுமாக மொத்தம் ரூ.1கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திட்டச் செயலா் சுபிசித்ரா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →