சாத்தான்குளம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்
சாத்தான்குளம் அருகே லாரியில் கடத்திய 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சாத்தான்குளம் அருகே லாரியில் கடத்திய 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சாத்தான்குளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு
தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் தில்லை நாகராஜன் தலைமையில் உதவி ஆய்வாளா் வேல்ராஜ் மற்றும் போலீஸாா் விஜயராமபுரத்தில் அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்டனா்.
அதில் தலா 100 கிலோ வீதம் , 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினா். இதுகுறித்து வழக்குப் பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனா்.