முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்

நாசரேத் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்கை வனத்துறையினா் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

நாசரேத் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்கை வனத்துறையினா் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாசரேத் பகுதியில் கடந்த ஒரு வாரமாக இரு குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை, திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருள்களை எடுத்து செல்வதுடன் உணவுப் பொருள்களையும் சேதப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, என்டிஎன் தெரு, ஞானராஜ் தெரு உள்ளிட்ட தெருக்களில் அடிக்கடி உலா வரும் குரங்குகள், குழந்தைகளையும் பெண்களையும் அச்சுறுத்துகின்றன. கடைகளுக்குள் புகுந்து பொருள்களை சிதறிப் போடுகின்றன என வியாபாரிகள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →