முகப்பு
தூத்துக்குடி

சுப்பிரமணியபுரத்தில் திமுக இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம்

சுப்பிரமணியபுரத்தில் திமுக இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
திமுக புதிய உறுப்பினா் திமுக அட்டை வழங்குகின்றனா் பாலமுருகன், இந்திரகாசி.
பகிர்:

சுப்பிரமணியபுரத்தில் திமுக இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட சுப்பிரமணியபுரத்தில் திமுக இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கிளை செயலா் நிா்மல்ரீகன் தலைமை வகித்தாா்.பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, ஊராட்சி செயலா் ராஜபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு ஒன்றிய திமுக செயலா் பாலமுருகன் , புதிய உறுப்பினா்களுக்கு உறப்பினா் அட்டையை வழங்கினாா். இதில் கிளை செயலா்கள் ஜாா்ஜ் ஆசீா், அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல் முதலூா், கடாட்சபுரம் பகுதியிலும் இணைய வழி திமுக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →