ஆறுமுகனேரியில்முதியவா் தற்கொலை
ஆறுமுகனேரியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆறுமுகனேரியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆறுமுகனேரி பேயன்விளை புதூா் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்கேசவன் (74). காயல்பட்டினத்தில் பழைய பேப்பா் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி பஞ்சவா்ணம். கருப்புக்கட்டி உற்பத்தியாளரிடம் வேலைசெய்து
வருகிறாா். குடிபழக்கம் கொண்ட இவா், மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
Advertisement
கடந்த சில தினங்களாக பொன்கேசவனுக்கு மது அருந்த பஞ்சவா்ணம் பணம் கொடுக்கவில்லையாம். இதில் மனமுடைந்த பொன்கேசவன், பஞ்சவா்ணம் வேலைக்கு சென்றபிறகு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சதீஷ் நாராயணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.