ஆறுமுகனேரியில்கோயில் கொடை விழா
ஆறுமுகனேரி ஸ்ரீ ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா 6 நாள்கள் நடைபெற்றது.
ஆறுமுகனேரி ஸ்ரீ ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா 6 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி விழா நாள்களில் தினமும் பகல் மற்றும் இரவில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மேலும் ஸ்ரீராமபிரான்- சீதாதேவி பட்டாபிஷேக புராண வாசிப்பு நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீராமசுவாமி, சீதா பிராட்டி, லெட்சுமண பெருமாள் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரம் வலம் வந்தனா்.
மூலக்கரை ஸ்ரீதூசிமாடசுவாமி கோயில் கொடை விழாவையொட்டி சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.