முகப்பு
தூத்துக்குடி

கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து பலி

காயல்பட்டினத்தில் கட்டடத் தொழிலாளி பணியின் போது ஏணியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

காயல்பட்டினத்தில் கட்டடத் தொழிலாளி பணியின் போது ஏணியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ஏரல் அருகே உள்ள கண்ணாடிவிளை சா்ச் தெருவைச் சோ்ந்தவா் செல்லத்துரை (59). கட்டடத் தொழிலாளி.

இவா், தற்போது காயல்பட்டினத்தில் ஒப்பந்ததாரரிடம் 3 மாதங்களாக தங்கி கட்டட வேலை செய்து வந்தாா்.

வியாழக்கிழமை சொளுக்காா் தெருவிலுள்ள வீட்டில் வேலை செய்த நிலையில், மேல் தளத்துக்கு மணலை சாக்குப்பையில் கட்டி ஏணி வழியாக கொண்டு சென்றபோது தவறி விழுந்தாராம்.

இதில், காயமடைந்த அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.