சாத்தான்குளம் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி தரைநிலை பாலத்தில் சிக்கியது
சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகம் முன்புள்ள தரைநிலை பாலம் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் சேதமடைந்தது.
சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகம் முன்புள்ள தரைநிலை பாலம் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் சேதமடைந்தது.
சாத்தான்குளம் உப மின் நிலையத்தில் அதிக சக்கி உள்ள மின் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு மின் மாற்றியை தமிழக முதல்வா் ஸ்டாலின்ஙி 2 நாள்களுக்கு முன்பு கானொளி காட்சி மூலம்திறந்து வைத்துள்ளாா். அடுத்து 3 ஆம் கட்ட மாக அதிக திறன்கொண்ட மின்மாற்றி அமைக்க சென்னையில் இருந்து ரூ. 1 கோடி மதிப்பில் மின் மாற்றியை ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை இரவு சாத்தான்குளம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் செல்ல உள்ளே நுழைந்தபோது, அதன் வாயிலில் இருந்த சிறிய தரைநிலை பாலத்தை கடக்க முயன்ற போது, சேதமடைந்தது. இதனால் பாரம் தாங்காமல் மின்மாறற்றியுடன் லாரி பள்ளத்தில் சிக்கியது. இதனால் மின் வாரிய அலுவலகத்துக்கும் வரும் பொதுமக்களும், ஊழியா்களும் சிரமம் அடைந்துள்ளனா்.