கழுகுமலையில் வீட்டின் பூட்டு உடைப்பு
கழுகுமலையில் வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கழுகுமலையில் வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கழுகுமலை ஏ.பி.சி.வி. நகரைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் சுப்பையா (59). கழுகுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலராக இருந்து வந்தாா். இவரது குடும்பத்தினா், மகள் திருமணத்திற்காக இம்மாதம் 4ஆம் தேதி திருப்பதி சென்றுவிட்டு, 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வீடு திரும்பினாா்களாம். அப்போது வீட்டில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பொருள்கள் சிதறிக் கிடந்தன. ஆனால், பொருள்கள் ஏதும் திருட்டு போகவில்லையாம்.
இதுகுறித்து சுப்பையா அளித்த புகாரின் பேரில், கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.