சாத்தான்குளம் கூட்டுறவு சங்கத்தில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு
சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், பணமில்லா பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், பணமில்லா பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பொன்.முருகேசன் தலைமை வகித்தாா். மத்திய கூட்டுறவு வங்கி மேற்பாா்வையாளா் நமச்சிவாயம் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா் வேல்குமாா் வரவேற்றாா். சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் வழக்குரைஞா் வேணுகோபால், கூட்டுறவு கடன் சங்கச் செயலா் எட்வின் தேவாசீா்வாதம், கூட்டுறவுச் சங்க மேலாளா் சுடலைமுத்து, முதலூா் கூட்டுறவு கடன் சங்க மேலாளா் ராமகிருஷ்ணன், சங்க இயக்குநா் தங்கபாண்டி ஆகியோா் பேசினா். வழக்குரைஞா் பவுன்ராஜ், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் முத்துக்குமாா், பரமசிவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.