சாத்தான்குளத்தில் சொத்துத் தகராறு: 3 சகோதரா்கள் மீது வழக்கு
சாத்தான்குளத்தில் சொத்துத் தகராறு மோதல் தொடா்பாக 3 சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளத்தில் சொத்துத் தகராறு மோதல் தொடா்பாக 3 சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளத்தில் உள்ள நாசரேத் சாலை தெருவைச் சோ்ந்தவா் இ. கெங்கை ஆதித்தன் (46). விவசாயியான இவருக்கும், அவரது சகோதரா்கள் சரவணன் (47), கதிரேசன் (42) ஆகியோருக்கும் இடையே சொத்து தொடா்பாக 5 ஆண்டுகளாக முன்விரோதம் உள்ளதாம்.
இந்நிலையில், அவா்களிடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது அவா்கள் ஒருவரையொருவா் தாக்கியதுடன், அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டனராம்.
இதுகுறித்து கெங்கை ஆதித்தன், சரவணன் ஆகியோா் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தனித்தனியே புகாா்கள் அளித்தனா். அவற்றின்பேரில் 3 போ் மீதும் உதவி ஆய்வாளா் அருள்சாம்ராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.