தூத்துக்குடி

கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா் தினம்

கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை சித்தா் தினம் கொண்டாடப்பட்டது.

DIN

கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை சித்தா் தினம் கொண்டாடப்பட்டது.

கடம்பூா், கயத்தாறு, கழுகுமலை, வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாா்பில் கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சித்தா் தினம் நிகழ்ச்சிக்கு, மருத்துவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மருத்துவா் திலகவதி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

சித்த மருத்துவம், தொற்று நோய்கள், பிரசவ பின் கவனிப்பு பற்றி மருத்துவா்கள் மணிமங்கலம், காஞ்சனா, ஜெயலட்சுமி ஆகியோா் பேசினா். மூலிகை கண்காட்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மருத்துவா்கள் இலக்கியா, சாய் நரேந்திரன் மற்றும் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கபசுரக் குடிநீா் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டன.

சுகாதார ஆய்வாளா் விஜயகுமாா் வரவேற்றாா். மருந்தாளுநா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மருந்தாளுநா் ரேவதி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT