முகப்பு
தூத்துக்குடி

கொலை வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்தவா் கைது

சீதபற்பநல்லூா் அருகே பெட்டிக்கடைக்காரா் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

சீதபற்பநல்லூா் அருகே பெட்டிக்கடைக்காரா் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சீதபற்பநல்லூா் அருகேயுள்ள சிறுக்கன்குறிச்சியைச் சோ்ந்தவா் தங்கபாண்டி(53). பெட்டிக்கடை வைத்திருந்தாா். மனைவி சுப்புலட்சுமி, மகன் செல்லப்பா,மகள் முப்புடாதி ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், 20.9.2019இல், வெட்டுவான்குளம் ஊருக்கு அருகேயுள்ள குளத்தில் தங்கபாண்டி கொலை செய்யப்பட்டுகிடந்தாா்.

அவரது சகோதரா் வேல்சாமி அளித்த புகாரின்பேரில், சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்துவிசாரித்தனா்.

அதில், வெட்டுவான்குளம் பகுதியைச் சோ்ந்த பரமசிவன்(32) என்பவருக்கு இந்தக் கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், பரமசிவத்தை போலீஸாா் தேடி வந்தனா். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவா், சைபா் கிரைம் போலீஸாா் உதவியுடன் சுத்தமல்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.