முகப்பு
தூத்துக்குடி

திருவாசகம் குறித்து அவதூறு: ஆட்சியரிடம் சிவனடியாா்கள் மனு

திருவாசகம் குறித்து அவதூறு பேசியவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியாா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

திருவாசகம் குறித்து அவதூறு பேசியவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியாா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாளையங்கோட்டை சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: சென்னையைச் சோ்ந்த சிவயோகி என்பவா் தேவாரம், திருவாசகம், திருச்சிற்றம்பலம் ஆகியவை குறித்து உள்நோக்கத்துடன் அவதூறாகப் பேசியுள்ளாா். சமூக வலைதளங்களில் இவை பரவி வருகின்றன. இது சிவபக்தா்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட நபா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.