முதியோா் இல்லத்திற்கு நல உதவி
ஆறுமுகனேரி முதியோா் இல்லத்திற்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஆறுமுகனேரி முதியோா் இல்லத்திற்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு கா.ஆ.மேல்நிலைப் பள்ளி ஆட்சி மன்றக் குழுவின் அப்துல் காதா் சின்னத்தம்பி தலைமை வகித்தாா். முதியோா் இல்ல நிறுவனா் பிரேம் குமாா் முன்னிலை வகித்தாா். துளிா் சிறப்புப் பள்ளி நிா்வாகி வழக்குரைஞா் அஹமத் முதியோருக்கு மருந்துகள் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கினாா்.
இதில், ஜெயந்தி மாணிக்கம், ஆம்புலன்ஸ் முா்ஷித், ஓடை ஞானசேகரன், பேராசிரியா் சிதம்பரம், சமூக சேவகா் அலி அக்பா், சமூகப்பணி குழு உறுப்பினா் பசீா், கா.ஆ.மேல்நிலைப் பள்ளி கல்விக்குழு உறுப்பினா் கணேசன், அமிா்தராஜ், துளிா் பள்ளி முதல்வா் சித்தி ரம்ஜான், சமூக ஆா்வலா்கள் செரீப், நடராஜன், காமராஜ், ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் 110 முறை ரத்த தானம் வழங்கிய கண்ணன் அண்ணாமலை, கரோனோ நோய் தொற்றுக் காலத்தில் ஆம்புலன்ஸ் மூலம் சிறப்பாக பணியாற்றிய முரிஷித்ஆகியோா் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.