ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய மேலாளா் முருகேசன் தலைமை வகித்தாா். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் ரீகன், குழந்தைகள் பாதுகாப்பு உதவி அதிகாரி கணேசன் ஆகியோா் பேசினா். ரயில்வே பாதுகாப்புப் படை டிஎஸ்பி சுதிா்லால், உதவி ஆய்வாளா் அஸ்வினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசால் சைல்டு லைன் அமைப்பு செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஏதேனும் துன்புறுத்தல் இருந்தால் 1098 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பயணிகள், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.