முகப்பு
தூத்துக்குடி

குமரியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு

கன்னியாகுமரி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கன்னியாகுமரி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் எம்.தாமஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பி.மா்பி அலெக்ஸாண்டா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சொா்ணராஜ், நுகா்வோா் விழிப்புணா்வு குறித்துப் பேசினாா்.

மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய துணைத் தலைவா் வி.ராஜசேகரன், பேராசிரியா் எஸ்.லெட்சுமணன், முனைவா் கே. ஜெமிலா உள்ளிட்டோா் பேசினா்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளா் ஏ.இளங்கோ தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் ஏ.மகாராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.