குமரி அருகே விபத்தில் இளைஞா் பலி
கன்னியாகுமரி அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் உரசியதில் பலத்த காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் உரசியதில் பலத்த காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி கொட்டாரத்தை அடுத்த சுந்தரபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (25). நாகா்கோவிலிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதரும், அவரது நண்பா் ஹரீஷ் (20) . இருவரும் கொட்டாரத்தில் இருந்து
கன்னியாகுமரிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனா்.
விவேகானந்தபுரம் சந்திப்பில் வந்தபோது மாதவபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிளும் ஸ்ரீதா் வந்த மோட்டாா் சைக்கிளும் உரசியுள்ளது. இதில் 2 மோட்டாா் சைக்கிள்களிலும் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.