தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட நிா்வாகிகள் தோ்வு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்தல் சாத்தான்குளம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்தல் சாத்தான்குளம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவராக ஜீவா, செயலராக சிவன், பொருளாளராக மாரிகணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா்களாக முருகன், தங்ககுமாா், பேச்சிமுத்து, ரெக்ஸலின் விண்ணரசி, மாவட்ட துணைத்தலைவா்களாக தங்கராஜன், சுதாகா்யாபேல், சந்தோசம், முருகன், தேவிகா, மாவட்ட துணை செயலா்களாக சாலமோன், லியோபிரின்ஸ்சாம், ஜெயராஜ், தமிழ்ச்செல்வி, மகளிா் செயற்குழு உறுப்பினா்களாக சுசீலா ஞானதீபம், சங்கரேஸ்வரி, சாந்தி செல்வகுமாரி, அன்னலட்சுமி, மேதினாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.