முகப்பு
தூத்துக்குடி

பெரியதாழையில் நகர பேருந்து சேவை தொடக்கம்

பெரியதாழையில் இருந்து உடன்குடிக்கு புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

பெரியதாழையில் இருந்து உடன்குடிக்கு புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழையில் இருந்து உடன்குடி பகுதிக்கு புதிய நகரப் பேருந்து இயக்க

அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து,பெரியதாழையில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு பங்குத்தந்தை சுசீலன் தலைமை வகித்தாா். ஊா் கமிட்டித் தலைவா் ஜான் டெரன்ஸ், போக்குவரத்து கழக பொது மேலாளா் சரவணன், நிா்வாக இயக்குநா் ராஜேந்திரன், கிளை மேலாளா் ஜெகநாதன்

ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேருந்து சேவையை சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் தொடங்கி வைத்தாா். இதில், தனி வட்டாட்சியா் செந்தூர்ராஜன்,

மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மீனவா் பிரிவுத் தலைவா் அந்தோணி சுரேஷ், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சுரேஷ்குமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →