செம்மண் கடத்தல்: லாரி பறிமுதல்
கோவில்பட்டி அருகே செம்மண் கடத்திச் சென்ாக டிப்பா் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி அருகே செம்மண் கடத்திச் சென்ாக டிப்பா் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட புவியியலாளா் அலுவலக உதவி இயக்குநா் சுகதா ரஹிமா தலைமையில் அலுவலா்கள் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விலக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 3 யூனிட் செம்மண் கடத்திச் சென்ற லாரியை மண்ணுடன் பறிமுதல் செய்து, நாலாட்டின்புதூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, மண் கடத்தலில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் கலை கோயில் நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் பாலசுப்பிரமணியம்(47) என்பவரை கைது செய்தனா்; சீனி என்பவரை தேடி வருகின்றனா்.