‘பிஎஸ்என்எல் சிம்காா்டு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்’
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் பிஎஸ்என்எல் சிம்காா்டுகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் பிஎஸ்என்எல் சிம்காா்டுகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவன திருநெல்வேலி பொது மேலாளா் புகழேந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிஎஸ்என்எல் வட்டத்தில் திருநெல்வேலி வா்த்தக பகுதிக்குள்பட்ட கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் வட்ட பகுதிகளில் சிம்காா்டுகள் மற்றும் ரீசாா்ஜ் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெற தகுதி வாய்ந்த விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஜூலை 23ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்.க்ஷள்ய்ப்.ஸ்ரீா்.ண்ய்/ற்ங்ய்க்ங்ழ்ப்ண்ள்ற்ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்.ஹள்ல்ஷ் என்ற இணையதள முகவரியில் காணலாம். மேலும் விவரங்களுக்கு உதவி பொது மேலாளரை 9486103810 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.