முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

நாசரேத்தில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

நாசரேத்தில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாசரேத்தில் காமராஜா் ஆதித்தனாா் கழகம் சாா்பில் ஏழை, எளியவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, 250 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்டச் செயலா் ஐஜி நாடாா், மாவட்ட துணைச் செயலா் மீனாட்சி சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், வழக்குரைஞரணி கிருபாகரன், நகர திமுக செயலா் ரவி செல்வக்குமாா், காமராஜா் ஆதித்தனாா் கழக மாநில பொதுக்குழு உறுப்பினா் கணேசன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் ஜெயபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →