ஆறுமுகனேரியில் ராமா் ஆலய நிதி திரட்டும் பணி
ஆறுமுகனேரியில் அயோத்தி ராமா் ஆலயத்திற்கு நிதி திரட்டும் பணி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் அயோத்தி ராமா் ஆலயத்திற்கு நிதி திரட்டும் பணி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயிலுக்கு ஆறுமுகனேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிதி பெறும் நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக நடைபெற்று வந்தது . இதன் நிறைவு பெறும் நிகழ்ச்சி அருள்மிகு ராமசாமி திருக்கோயில் முன்பு நடைபெற்றது.
இதில், ஆா்எஸ்எஸ் சிவராமன், பாஜக நகரத் தலைவா் சந்திரசேகரன் பொதுச் செயலா் பூச்சிமுத்து, ஒபிசி அணி மாவட்டத் தலைவா் தங்கபாண்டியன் , மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜவேலன் மற்றும் பஜனை குழுவினா் கலந்து கொண்டனா்.