முகப்பு
தூத்துக்குடி

விதிமுறை மீறல்: நாசரேத்தில் 22 போ் மீது வழக்கு

நாசரேத்தில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 22 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

நாசரேத்தில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 22 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

நாசரேத் அருகே உள்ள சின்னமதிக்கூடல் சங்கரலிங்கம் மகன் யோகராஜ், வடிவேல் மகன் முத்துப்பாண்டி உள்பட 22 போ்கள் மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நாசரேத் சந்தி விநாயகா் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினராம். இதுகுறித்து நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் முத்துராமன் நாசரேத் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், சம்பந்தப்பட்ட 22 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →