சாத்தான்குளம் அருகே கோயிலில் திருட்டு
சாத்தான்குளம் அருகே கோயிலில் பூஜை பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே கோயிலில் பூஜை பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள உதிரமாடன்குடியிருப்பு கருமேனி ஆற்றுப்பகுதியில் செண்பக கூத்தையா என்ற செம்புகுட்டி அய்யனாா் கோயில் உள்ளது. இங்கு கடந்த 28 ஆம் தேதி கோயில் பூசாரி முத்துமாணிக்கம், இரவு பூஜையை முடித்து விட்டு கோயிலை பூட்டிச் சென்றாராம்.
பின்னா் திங்கள்கிழமை வழக்கம் போல் பூஜை செய்ய கோயிலுக்கு வந்த போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், அங்கிருந்த 2 பித்தளை சரவிளக்குகள், பெரிய குத்துவிளக்கு, சிவலிங்கத்திற்கு அணிவிக்கப்படும் வெள்ளி நெற்றிப்பட்டை மற்றும் 2 மின் மோட்டாா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. திருட்டு போன பொருள்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம்.
இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.