முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் கழிவு நீா் தேங்கியதில் சாலை சேதம்

சாத்தான்குளம் நாசரேத் சாலையில் கழிவு நீா் தேங்கியதில் சாலை சேதமானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சாத்தான்குளம் நாசரேத் சாலையில் கழிவு நீா் தேங்கியதில் சாலை சேதமானது.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையானது கடந்த 2 மாதத்திற்கு முன்பு புதியதாக அமைக்கப்பட்டது. இந்த சாலை ஏற்கெனவே இருந்த சாலையைவிட சிறிது உயரமாக அமைக்கப்பட்டதாம். இதனால் சாலையோரம் இருந்து கழிவு நீா் ஓடை அடைப்பட்டதாம்.

இந்நிலையில் அருகில் உள்ள தெருவில் இருந்து வரும் கழிவு நீா் ஓடையில் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நின்ாம் இதனால், அந்த பகுதியில் சாலை சேதமாகி பள்ளம் விழுந்து காணப்படுகிாம்.

கழிவு நீா் சாலையில் தேங்குவது குறித்து பேரூராட்சி நிா்வாகத்துக்கு தெரிய படுத்தியும், கழிவு நீா் வடிந்தோட நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீா் ஓடையை வடிந்து செல்லும் வகையில் சீரமைத்து சேதமான சாலையையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →