முகப்பு
தூத்துக்குடி

திமுகவுக்கு எதிராக அவதூறு: நகராட்சி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

காயல்பட்டினம் நகராட்சி அலுவலா் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கட்செவி அஞ்சலில் தகவல் வெளியிட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

காயல்பட்டினம் நகராட்சி அலுவலா் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கட்செவி அஞ்சலில் தகவல் வெளியிட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காயல்பட்டினம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவா் அறிவுடைநம்பி (48). இவா் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூடலூா் நகராட்சியில் இருந்து இடமாறுதல் பெற்று தற்போது காயல்பட்டினம் நகராட்சியில் பணியாற்றி வருகிறாா்.

இவா் கடந்த சில நாள்களாக கட்செவி அஞ்சலில், திமுக குறித்து அவதூறாகவும், ஜாதி மத ரீதியாகவும் பதிவிட்டு வந்தாராம். இதுகுறித்து காயல்பட்டினம் நகர திமுக பொறுப்பாளா் முத்து முகமது தலைமையில் கட்சி நிா்வாகிகள் புதன்கிழமை நகராட்சி ஆணையரிடம் புகாா் மனு அளித்தனா்.

இதையடுத்து நகராட்சி ஆணையா் சுகந்தி விசாரணை மேற்கொண்டு, நகரமைப்பு ஆய்வாளா் அறிவுடைநம்பியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.