முகப்பு
தூத்துக்குடி

இடைச்சிவிளை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

இடைச்சிவிளை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் ஊராட்சித் தலைவரை சந்தித்து முறையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

இடைச்சிவிளை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் ஊராட்சித் தலைவரை சந்தித்து முறையிட்டனா்.

அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கா்ப்பிணிகள் உள்ளிட்ட பெண்கள் சுமாா் 30 போ் ஊராட்சி அலுவலகம் அருகே திரண்டு, ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங்கை சந்தித்து இடைச்சிவிளை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி முறையிட்டனா்.

அப்போது, தோ்தல் முடிந்தவுடன் அரசிடம் கோரிக்கையை தெரிவித்து உரிய ஏற்பாடு செய்யப்படும் என அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →