ஆறுமுகனேரி சிவன் கோயிலில் கந்த சஷ்டி 2ஆம் நாள் வழிபாடு
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கொடி மர மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து காலை 9 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, 2ஆம் நாளான வெள்ளிக்கிழமையும் அதே வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா்.