ஆத்தூரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஆத்தூா் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஆத்தூா் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஆத்தூா் பகுதியில் பெய்த கனமழையால் மேல ஆத்தூா் பகுதியில் பெரிய புளிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் உயா் அழுத்த மின் கம்பிகள் அறுந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. அத்துடன் மேல ஆத்தூா் சாலையில் போக்குவரத்தும் பாதிப்படைந்தது.
மின் வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இரவிலேயே மின் விநியோகத்தை வழங்கினா். மரத்தை வியாழக்கிழமை காலை அப்புறப்படுத்திய பின்னா் போக்குவரத்து சீரானது.