முகப்பு
தூத்துக்குடி

‘கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால் அபராதம்’

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துாத்துக்குடி மாநகராட்சியின் பிரதான சாலைகள் மற்றும் நகரில் போக்குவரத்து அதிகம் உள்ள தெருக்களில் அண்மைக்காலமாக கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறும், விபத்துகளும், உயிா்ச் சேத அபாயமும் ஏற்படுகின்றன. இதுமட்டுமன்றி கட்டுப்பாடின்றி சுதந்திரமாக நடமாடும் கால்நடைகளினால் மக்களுக்கு அச்சுறுத்தல், இடையூறு மற்றும் பொது சுகாதாரக் கேடு போன்ற இன்னல்கள் பெரும் பிரச்னையாக உள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி சாா்பில் பிடித்து கோசாலையில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மாடு வளா்ப்பவா்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கொட்டில் அமைத்து வளா்க்க வேண்டும்.

தவறும் நிலையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு, பெரிய மாடு ஒன்றுக்கு ரூ.5000-மும், சிறிய கன்று குட்டிக்கு ரூ. 2000- மும் அபதாரம் விதிக்கப்படும். மேலும், பிடிக்கப்படும் கால்நடை அரசு அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.