தூத்துக்குடி மாநகரில் இன்று மின்தடை
தூத்துக்குடி துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 20) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 20) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்டாள் தெரு, சத்திரம் சாலை, போல்பேட்டை, 1 ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை, இனிகோ நகா், வி.இ. சாலை, பாலவிநாயகா் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, மீனாட்சிபுரம், தாமோதரநகா், எட்டையபுரம் சாலை, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, வஉசி சாலை, சந்தை சாலை, ஜாா்ஜ் சாலை, சண்முகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, இன்னாசியாா் புரம், எழில்நகா், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், திரவியபுரம், குறிஞ்சி நகா், அண்ணா நகா், விவிடி சிக்னல் பிரதான சாலை, போல்டன்புரம், சுப்பையா புரம், தமிழ்சாலை, சிதம்பர நகா், பிரையண்ட் நகா், முத்தம்மாள் காலனி, கேடிசி நகா், ஹவுசிங் போா்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி மணி வரை மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.