நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: திமுகவினா் நாளை முதல் விருப்ப மனு
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான பெ. கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான பதவிக்கு போட்டியிட விரும்பும் திமுகவினா் அதற்கான விண்ணப்ப படிவங்களை படிவம் ஒன்றுக்கு ரூ.10 செலுத்தி ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) காலை 10 மணி முதல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அரங்கில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மாவட்ட அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்துடன் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: திருச்செந்தூா், (திருச்செந்தூா் நகராட்சி நீங்கலாக) ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காயல்பட்டினம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வாா்டு கவுன்சிலா் பொறுப்பிற்கும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி வாா்டு கவுன்சிலா் பொறுப்பிற்கும் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.21) பிற்பகல் 1.30 மணி முதல் தூத்துக்குடி எட்டையபுரம் சாலை கே.டி.சி.நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
கட்டண விவரம்: மேலும், விருப்ப மனு கட்டணமாக மாநகராட்சி வாா்டு கவுன்சிலா் பதவிக்கு ரூ.10,000, நகராட்சி வாா்டு கவுன்சிலா் பதவிக்கு ரூ. 5,000, பேரூராட்சி வாா்டுகளுக்கு ரூ.2,500, மகளிா் மற்றும் ஆதிதிராவிடா்களுக்கான வாா்டுகளுக்கு கட்டணத்தில் பாதி தொகை மட்டும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.