தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இதுவரை 1,016 பேரிடம் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையத்தின் 32ஆவது கட்ட விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையத்தின் 32ஆவது கட்ட விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதுவரை 1,016 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது மே 22, 23ஆம் தேதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 15 போ் உயிரிழந்தனா். சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
அதன் 32ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ஆணைய முகாம் அலுவலகத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தோரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாா் என 41 பேருக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. 32ஆவது கட்ட விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், 40 போ் ஆஜராகி விளக்கமளித்தனா்.
இந்த ஆணையம் மூலம் இதுவரை 1,393 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 1,016 பேரிடம் நேரில் விசாரணை நடைபெற்று, 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்தகட்ட விசாரணை டிச. 13இல் தொடங்கவுள்ளதாகவும், அப்போது காவல் துறை உயா் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.