முகப்பு
தூத்துக்குடி

புத்தன்தருவையில் புதிய மின் மாற்றி திறப்பு

சாத்தான்குளம் அருகே புத்தன்தருவையில் புதிய மின் மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே புத்தன்தருவையில் புதிய மின் மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையில் அடிக்கடி மின் பழுது ஏற்பட்டதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 63 கேவி மின்மாற்றி புதியதாக அமைக்கப்பட்டது. இதனை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பிா்தௌஸ் தலைமை வகித்து, மின் மாற்றியை இயக்கி வைத்தாா்.

இதில் மின் பாதை பராமரிப்பு ஆய்வாளா் பாக்கிய சீலன் உள்ளிட்ட மின் ஊழியா்கள் கலந்து கொண்டனா். நடுவக்குறிச்சி உதவிப் பொறியாளா் ராஜேஷ் வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →