ஸ்ரீவைகுண்டம்- உடன்குடிக்குநகரப் பேருந்து மீண்டும் இயக்க வலியுறுத்தல்
சாத்தான்குளத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம், உடன்குடிக்கு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம், உடன்குடிக்கு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளம் பணிமனையிலிருந்து ஸ்ரீவைகுண்டம், உடன்குடிக்கு சென்று வந்த நகரப் பேருந்துகள், கரோனா பொதுமுடக்க தளா்வுக்குப் பின்னா் தற்போது வரை இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனா்.
எனவே, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அந்த நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.