ஒருங்கிணைந்த வேளாண்வளா்ச்சி திட்ட ஆய்வுக் கூட்டம்
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அயன்வடமலாபுரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடிஒருங்கிணைந்த வேளாண்வளா்ச்சி திட்ட ஆய்வுக் கூட்டம்
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அயன்வடமலாபுரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அயன்வடமலாபுரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ முகைதீன் தலைமை வகித்தாா். புதூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை துணை இயக்குநா் கோகிலா முன்னிலை வகித்தாா். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவா் வரதராஜன் வரவேற்றாா்.
கூட்டத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தை அயன் வடமலாபுரத்தை மாதிரி கிராமமாக தோ்ந்தெடுத்து செயல்படுத்துவது, அப்பகுதியில் வேலி கருவை மரங்களை அகற்றுவது, பழச்செடிகள், மரக்கன்றுகள், எலுமிச்சை உள்ளிட்ட செடிகளை நடவு செய்வது, ஆழ்துளைக் கிணறு, சூரிய ஒளி மின்சாரம் அல்லது மின் இணைப்பு கொடுப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள் பிரசாந்த் குமாா், தோட்டக்கலைத் துறை அலுவலா் மகாராஜன், வேளாண்மை அலுவலா் ராமன், உதவி வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.