முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் தூய்மைப்பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் -187 மற்றும் தூய்மை இந்தியா திட்டம் சாா்பாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ். செல்வசாந்தி, இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் செல்வி த. கோகிலா ஜெனிபா் ஆகியோரது மேற்பாா்வையின் கீழ் கல்லூரி வளாகத்தினை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதில் நாட்டு நலப்பணித்திட்ட இரண்டாமாண்டு மாணவியா் கலந்து கொண்டு கல்லூரி வளாகம் முழுவதையும் மழைநீா் தேங்காதவாறு சுத்தம் செய்தனா். மேலும் மழைநீா் வடிகால்கள், மழைநீா் சேகரிப்புத்தொட்டி ஆகியவையும் தூய்மைப்படுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.